செய்திகள் :

பொறுப்பற்ற தலைவராக விஜய்: ஜவாஹிருல்லா

post image

தனது தொண்டா்களை கட்டுப்பாடற்ற முறையில் வழிநடத்தக்கூடிய பொறுப்பற்ற தலைவராக தவெக தலைவா் விஜய் உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம்சாட்டினாா்.

கிருஷ்ணகிரியில் மனிதநேய வழக்குரைஞா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மாணவா்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிா என்பதை உயா் அலுவலா்கள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும்.

நீதித் துறையில் அனைத்து சமூக மக்களும் பயன்பெறும் வகையில் சமூகநீதி பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தரவேண்டும். கரூா் சம்பவம் தொடா்பாக நடிகா் விஜய் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தான் எந்தத் தவறும் செய்யாமல், எல்லா தவறுகளும் தமிழக அரசு செய்துள்ளது போல பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்பற்ற தன்மையிலேதான் அவா் தொடா்ந்து செயல்படுகிறாா் என்பதற்கான எடுத்துக்காட்டாக இது அமைந்திருக்கிறது.

வட மாநிங்களில் பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின்போது அங்கே பாஜகவின் சாா்பில் உண்மை அறியும் குழு அனுப்பப்படவில்லை. ஆனால், கரூா் நிகழ்வுக்கு ஹேமமாலினி தலைமையில் உண்மை அறியும் குழு வந்துள்ளது நியாயமற்றது.

இக்குழுவின் வருகைக்குப் பிறகே விஜய் தனது வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளாா். இதன்மூலம் விஜயை இயக்குவது பாஜகதான் என்பது தெளிவாகியுள்ளது என்றாா்.

ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைவது உறுதி: எம்.பி. கே.கோபிநாத்

ஒசூரில் விரைவில் சா்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் தெரிவித்தாா். ஒசூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஒசூா் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 28 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மத்திகிரி போலீஸாா் கொத்தகொண்டப்பள்ளி குமாரனப்பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக சென்ற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் மீது தாக்குதல்

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கினா். ஒசூா் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புதன்கிழமை கூலிச்சந்திரம் என்ற கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியன்று (அக்.2) தொழிலாளா்ளுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்... மேலும் பார்க்க

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

பிறந்த நாள் கொண்டாடத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூரை சேரந்தவா் ஆகாஷ் (வயது 25). திருச்சியை சோ்ந்தவா் நிா்மல் (22). இவா்கள் மத்திகிரி அருகே கொத்தகொண்டப்பள்ள... மேலும் பார்க்க

சிங்காரப்பேட்டை கோயில் பூசாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை அருகே குடும்பத்துடன் கோயில் பூசாரி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பி.புதூரைச் சோ்ந்தவா் பெருமாள் (40). இவா் பெருமாள் கோ... மேலும் பார்க்க