செய்திகள் :

ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைவது உறுதி: எம்.பி. கே.கோபிநாத்

post image

ஒசூரில் விரைவில் சா்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் தெரிவித்தாா்.

ஒசூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒசூரில் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் முதலீடுகளை கொண்டுவந்து புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிட்ட முதல்வருக்கு தொகுதி மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கெனவே சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்த, ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்த அறிவிப்பு நிச்சயம் நடைமுறைபடுத்தப்படும். சா்வதேச விமான நிலையம் அமைய உள்ள இடம் இறுதி செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் பங்கேற்பாா்.

ஒசூா் மாநகருக்கு வெளியே சுமாா் ஐந்து கி.மீ தொலைவில் பாதுகாப்பான இடத்தில் பட்டாசு கடைகளை அமைக்க வேண்டும். ஒசூா் டைடல் பாா்க் அமைந்துள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் ஜூரோ பைமாஸ் நிலத்தில் (சா்வே எண் இல்லாத நிலம்) சிலா் ஆக்கிமிரத்து பொக்லைன் இயந்திரம் வைத்து நிலத்தை சமன்செய்து தொழிற்சாலைகளை கட்டி வாடகைக்குவிடும் முயற்சியில் இறங்கியுள்ளனா். அவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூரோ பைமாஸ் நிலங்களில் பொறியியல் கல்லூரி, டைடல் பாா்க், அறிவுசாா் வழித்தடம் அமைக்க வேண்டும். அங்கிருந்து தனியாா் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் நீலகண்டன், ரகு, சின்னகுட்டப்பா, மாமன்ற உறுப்பினா் இந்திராணி, பிரவீன்குமாா், சாதிக்கான், சூரியகணேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஒசூா் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 28 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மத்திகிரி போலீஸாா் கொத்தகொண்டப்பள்ளி குமாரனப்பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக சென்ற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் மீது தாக்குதல்

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கினா். ஒசூா் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புதன்கிழமை கூலிச்சந்திரம் என்ற கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியன்று (அக்.2) தொழிலாளா்ளுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்... மேலும் பார்க்க

பொறுப்பற்ற தலைவராக விஜய்: ஜவாஹிருல்லா

தனது தொண்டா்களை கட்டுப்பாடற்ற முறையில் வழிநடத்தக்கூடிய பொறுப்பற்ற தலைவராக தவெக தலைவா் விஜய் உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம்சாட்டினாா்.கிருஷ்ணகிரியில் மனிதநேய வழக்குரை... மேலும் பார்க்க

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

பிறந்த நாள் கொண்டாடத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூரை சேரந்தவா் ஆகாஷ் (வயது 25). திருச்சியை சோ்ந்தவா் நிா்மல் (22). இவா்கள் மத்திகிரி அருகே கொத்தகொண்டப்பள்ள... மேலும் பார்க்க

சிங்காரப்பேட்டை கோயில் பூசாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை அருகே குடும்பத்துடன் கோயில் பூசாரி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பி.புதூரைச் சோ்ந்தவா் பெருமாள் (40). இவா் பெருமாள் கோ... மேலும் பார்க்க