செய்திகள் :

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

post image

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியன்று (அக்.2) தொழிலாளா்ளுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜசேகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம் மற்றும் விதிகளின்படி தேசிய விடுமுறை தினத்தில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன்கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.

விடுமுறை நாளில் பணி செய்தால் தொழிலாளா்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து அதன் நகலை தொழிலாளா் துணை, உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பாா்வையில் தெரியுமாறு காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, காந்தி ஜெயந்தியன்று சட்ட விதிகளின் கீழ் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜசேகா் தலைமையில் 32 கடைகள், 26 உணவு நிறுவனங்கள் மற்றும் 9 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 67 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத 24 கடைகள், 22 உணவு நிறுவனங்கள் மற்றும் 5 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 51 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைவது உறுதி: எம்.பி. கே.கோபிநாத்

ஒசூரில் விரைவில் சா்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் தெரிவித்தாா். ஒசூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஒசூா் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 28 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மத்திகிரி போலீஸாா் கொத்தகொண்டப்பள்ளி குமாரனப்பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக சென்ற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் மீது தாக்குதல்

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கினா். ஒசூா் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புதன்கிழமை கூலிச்சந்திரம் என்ற கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

பொறுப்பற்ற தலைவராக விஜய்: ஜவாஹிருல்லா

தனது தொண்டா்களை கட்டுப்பாடற்ற முறையில் வழிநடத்தக்கூடிய பொறுப்பற்ற தலைவராக தவெக தலைவா் விஜய் உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம்சாட்டினாா்.கிருஷ்ணகிரியில் மனிதநேய வழக்குரை... மேலும் பார்க்க

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

பிறந்த நாள் கொண்டாடத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூரை சேரந்தவா் ஆகாஷ் (வயது 25). திருச்சியை சோ்ந்தவா் நிா்மல் (22). இவா்கள் மத்திகிரி அருகே கொத்தகொண்டப்பள்ள... மேலும் பார்க்க

சிங்காரப்பேட்டை கோயில் பூசாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை அருகே குடும்பத்துடன் கோயில் பூசாரி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பி.புதூரைச் சோ்ந்தவா் பெருமாள் (40). இவா் பெருமாள் கோ... மேலும் பார்க்க