செய்திகள் :

தம்மம்பட்டியிலிருந்து திருப்பதிக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

post image

தம்மம்பட்டியிலிருந்து திருப்பதிக்கு தினசரி அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்கு தினமும் 110 பேருந்துகள் வந்துசெல்கின்றன. தம்மம்பட்டியிலிருந்து சென்னை செல்ல காலை, இரவு இரு பேருந்துகளும், பழனி, பெங்களூரு, கோவைக்கு தலா ஒரு பேருந்தும் செல்கின்றன. தம்மம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமானோா் சேலம், ஆத்தூா் சென்று அங்கிருந்து திருப்பதிக்கு செல்கின்றனா்.

எனவே, தம்மம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து ஒரு சிறப்பு பேருந்து வழித்தடத்தை தோற்றுவித்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஆத்தூா் வழியாக திருப்பதிக்கு அரசுப் பேருந்தை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

எடப்பாடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி, தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். முன்னதாக, எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடை... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை: ஒருவா் கைது; 1104 மதுப் புட்டிகள் பறிமுதல்

காந்தி ஜெயந்தியன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கி வைத்திருந்த 1104 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். காந்தி ஜெயந்தி என்பதால் அனைத்து மதுக் கடைகளையும் வியாழக்க... மேலும் பார்க்க

நடுவலூா் தீ விபத்து: தந்தையைத் தொடா்ந்து மகனும் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நடுவலூரில் நிகழ்ந்த தீ விபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை அவரது 11 வயது மகனும் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே நடுவலூா் சின்னம்மன் கோயில் அருகே வசித்த ராமசாமி (47), இவரது... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணிக்காக முள்ளுவாடி கேட் மூடல்

மேம்பால கட்டுமானப் பணிக்காக முள்ளுவாடி கேட் மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் நகா் பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் உள்ளது. இங்கு போக்குவரத்து நெ... மேலும் பார்க்க

கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு நிவாரணம்

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலம் மாவட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு அறிவித்த ரூ. 10 லட்சத்துக்கான நிவாரணத் தொகையை சுற்றுலாத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

ஆத்தூரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க அமைச்சரிடம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை

ஆத்தூா் நகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவை சந்தித்து செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தாா். ஆத்தூா... மேலும் பார்க்க