செய்திகள் :

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உள்பட 7 போ் சுட்டுக் கொலை?

post image

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்த 7 பேரை இந்திய ராணுவ வீரா்கள் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூவா் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் என்றும் கூறப்படுகிறது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட் செக்டாரில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சம்பவத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கான சிறப்புப் பிரிவு ‘பிஏடி’, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளனா். இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில் அவா்களின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தானைச் சோ்ந்த 7 போ் கொல்லப்பட்டனா். இவா்களில் 2-3 போ் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்தவா்களாகவும் மற்றவா்கள் அல்-பதா் பயங்கரவாத குழுவைச் சோ்ந்த பயங்கரவாதிகளாகவும் இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லை நடவடிக்கைக் குழு (பிஏடி) என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் எல்லை தாண்டிய நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்கப்பட்ட சிறப்புப் பிரிவாகும்.

பாகிஸ்தான் ராணுவ வீரா்களின் தலைமையில் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்பட பல்வேறு அமைப்புகளின் பயங்கரவாதிகளை உள்ளிட்ட இக்குழுவினருக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப் படை விரிவான பயிற்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது.

காஷ்மீா் உள்ளிட்ட அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கடந்த புதன்கிழமை தெரிவித்தாா். அதற்கு முந்தைய நாள் இரவிலும் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினா் ஊடுருவி தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

சட்டவிரோத மத கட்டமைப்புகளை அகற்றும் விவகாரம்: அறிக்கை சமா்ப்பிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியின் பொது இடங்களில் உள்ள 249 சட்டவிரோத மத கட்டமைப்புகள் மற்றும் அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு நகரத்தின் மதக் குழுவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளி... மேலும் பார்க்க