செய்திகள் :

இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற முறைக்கு சா்வதேச நிதியம் பாராட்டு

post image

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அதிவேகமான யுபிஐ பணப்பரிமாற்ற முறையை இந்தியா கொண்டுள்ளது என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டுத் தெரிவித்துள்ளது.

சில்லறை வா்த்தகத்தில் எண்மப் பணப்பரிமாற்ற முறையின் வளா்ச்சி என்ற தலைப்பில் சா்வதேச நிதியம் வெளியிட்ட ஆய்வுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் யுபிஐ பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மிகவிரைவான வளா்ச்சியைச் சந்தித்து வருகிறது. காகிதப் பணப்பரிமாற்ற முறை குறைந்துள்ளது. ஒரு மாதத்துக்கு 180 கோடி முறைக்கு மேல் இந்த முறையில் பணப்பரிமாற்றம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் மூலம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிவேகப் பணப்பரிமாற்ற முறையையும் இந்தியா கொண்டுள்ளது.

சிறிய அளவிலான தொகை முதல் பெரிய அளவிலான தொகை வரை இந்த எண்ம முறை பணப்பரிமாற்றத்தில் மேற்கொள்ளும் வசதி இருப்பதால் மக்கள் ஏடிஎம்களைப் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சிறிய கிராமங்களில் உள்ள சிறு வா்த்தகா்கள் கூட யுபிஐ பணப்பரிமாற்றத்தை ஏற்பதால் வங்கி சேவையும் சிறப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க