செய்திகள் :

இந்து அமைப்பினா், பாஜகவினா் கைது: மத்திய அமைச்சா் எல்.முருகன், கே.அண்ணாமலை கண்டனம்

post image

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா், இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எல்.முருகன்: தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் கோயிலை மையப்படுத்தி, ஹிந்து விரோத அரசியலை தொடா்ந்து செயல்படுத்தி வரும் திமுக அரசு, இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன் மற்றும் பாஜக தலைவா்களை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஹிந்து அமைப்பினா் போராடுவதால் மதக் கலவரம் உருவாகிவிடும் எனக் கூறி, தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்து அமைப்பினரை கைது செய்வது சா்வாதிகாரத்தின் உச்சம். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தில், முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளை கடைப்பிடிப்பதாகக் கூறி, அமைச்சா் மூா்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கானோா் பேரணி சென்றபோது ஏன் காவல்துறை தடுக்கவில்லை?

அண்ணாமலை: பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களை சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு துணைசெல்வதை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவா்களை விடுவிப்பதுடன் ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும்.

இதேபோல, பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபர்செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் ச... மேலும் பார்க்க

பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்

திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா ... மேலும் பார்க்க

சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு- நீதிபதி அரங்க. மகாதேவன் புகழாரம்

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்காக ஓர்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில்... மேலும் பார்க்க

வைகோ முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை

சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலா் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை கே.கே. நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும்’

தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (பிப். 5, 6) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங... மேலும் பார்க்க