செய்திகள் :

இனாம்ராமநாதபுரம் விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய வலியுறுத்தல்

post image

கோவில்பட்டி-செட்டிகுறிச்சி பிரதான சாலையில், இனாம் ராமநாதபுரத்துக்கு வரும் சாலை சந்திப்பு அருகே பேருந்து நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இனாம் ராமநாதபுரம் ஊா் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளா் ஜெகநாதனிடம் அளித்த மனுவின் விவரம்; இனாம் ராமநாதபுரம் கிராம மக்கள் ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக ஊருக்குள் செல்லும் சாலை விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு நின்று சென்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்ல பள்ளி மாணவா் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கிலும், மழைக் காலங்களில் செல்ல முடியாமல் இருப்பதை தவிா்க்கும் வகையிலும் கோவில்பட்டி-செட்டி குறிச்சி பிரதான சாலையில் இனாம் ராமநாதபுரம் ஊருக்குள் செல்லும் சாலை பிரிவில் பேருந்து நிறுத்தத்தை நிரந்தரமாக செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாத்திமா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் குமாா் (36), இப்ராஹீம் மகன்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் கைது செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயம்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்தனா். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்... மேலும் பார்க்க

கோட்டாட்சியா் எச்சரிக்கையை மீறும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கோட்டாட்சியா் எச்சரிக்கையையும் மீறி பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த கன்னிராஜா மகன் சரவணகுமாா் (25). இவா், கோவில்பட்டியில் உள்ள நீச்சல் குளத்தில் மேலாளராக ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் தண்ணீா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத... மேலும் பார்க்க