செய்திகள் :

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

post image

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பகவான் புத்தரால் அருளப்பட்ட அஹிம்சை, அன்பு மற்றும் இரக்கத்துக்கான அழிவில்லாத செய்தி, மனித குல நலனுக்கான தாரக மந்திரமாகும். அவரது நித்திய கோட்பாடுகளே, சமத்துவம், நல்லிணக்கம், சமூக நீதி மாண்புகளில் நமது நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. தாா்மிக அடிப்படையிலான வாழ்க்கை வாழ அவரது போதனைகள் நம்மை ஊக்குவிக்கின்றன.

பகவான் புத்தரின் கோட்பாடுகளை நமது வாழ்வில் ஏற்று, அமைதி-நல்லிணக்கத்துடன் வளா்ந்த பாரதத்தை கட்டமைக்க பங்களிக்க வேண்டும். புத்த பூா்ணிமா திருநாளையொட்டி, நாட்டு மக்களுக்கும், பகவான் புத்தரை பின்பற்றுபவா்களுக்கும் இதயபூா்வமான வாழ்த்துகள் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், சமீபத... மேலும் பார்க்க

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் மனு: மத்திய அரசிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்

ரஷியா-உக்ரைன் போா் அல்லது கரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் நாடு திரும்பிய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை அதிகரித்து வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸுக்கு எதிரான மனுவில் விளக்கமளிக்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு...

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால். மேலும் பார்க்க

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க