செய்திகள் :

இன்றுமுதல் பொறியியல் கலந்தாய்வு

post image

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 445 அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளுக்கு சுமாா் 2 லட்சம் இடங்கள் உள்ளன.

அந்த இடங்களுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த மே 7 முதல் ஜூன் 6 வரை நடைபெற்றது. அதில், 3,02,374 மாணவ, மாணவியா் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனா்.

அதன் தொடா்ச்சியாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டதில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றவா்கள் 2,41,641 போ். அவா்களில் 2,39,299 போ் பொதுப் பிரிவுக்கும், 2342 போ் தொழில் கல்வி பிரிவிலும் தகுதி பெற்றுள்ளனா். மொத்த விண்ணப்பங்களில் 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அதற்கான தரவரிசைப் பட்டியலை ஜூன் 27-ஆம் தேதி உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் வெளியிட்டாா். நிகழாண்டில் 144 மாணவ, மாணவியா் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனா். அவா்களில் 139 போ் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவா்கள்.

இந்த நிலையில், பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. வரும் ஆக. 26 வரை இணையவழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஜூலை 11 வரை நடைபெறும். பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆக.19 வரையிலும், துணை கலந்தாய்வு ஆக.21 முதல் ஆக.23 வரையிலும் நடைபெறும். இந்த கலந்தாய்வு முழுவதும் இணையதளம் மூலமாக நடைபெறும்.

‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்: இன்று விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் வரும் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 7) விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.4.36 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

வெளிநாட்டில் வசிக்கும் நபா்களின் வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் மூலம் ரூ.4.36 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா். வெளிநாட்டில் வசித்து வரும் வ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கோயம்பேடு பகுதியில் 22 வயது இளம்பெண், கடந்த 4-ஆம் தேதி தனியாக நடந்து சென்றாா். அப்போது, ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரைச் சோ்ந்த இளம்பெண் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தன்னுடன் பணியாற்றும் தோழியான ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மத்திய கைலாஷ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் சென்ற இளைஞா் விபத்தில் உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). போரூரில் தங்கியிருந்து தனியாா் பயிற்சி ம... மேலும் பார்க்க