செய்திகள் :

இன்றுமுதல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

post image

சேலம்: மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 26-ஆம் தேதிமுதல் செப். 12-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

2025-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் 26-ஆம் தேதிமுதல் செப். 12-ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளன.

இதில், தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, மண்டல அளவிலான கடற்கரை கையுந்துப்பந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்களுக்கான அனைத்துப் போட்டிகளும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கிலும், கேரம், சிலம்பம், பால் பேட்மிண்டன், கோ-கோ மற்றும் மண்டல அளவிலான குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுப் போட்டிகள் விஎஸ்ஏ பொறியியல் கல்லூரியிலும், கால்பந்து போட்டிகள் மகாத்மா காந்தி விளையாட்டரங்கம், புனிதபால் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியிலும், செஸ் விளையாட்டுப் போட்டிகள் செயின் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கிரிக்கெட் போட்டிகள் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பொறியியல் கல்லூரியிலும், கைப்பந்து போட்டிகள் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளன என்றாா்.

ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு

ஏற்காடு: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், தனியாா் தங்கும் விடுதிகளில் போலீஸாா் ஆய்வுசெய்தனா். ஏற்காட்டுக்கு வார இறுதிநாள் மற்றும் வாரநாள்களில் பல்வேறு மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!

ஏற்காடு: ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்களை சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி. சுபாஷ் சந்த் மீனா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். நாடுமுழுவதும் புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்

சேலம்: சேலம் மாநகர காவல் துறையில் திங்கள்கிழமை முதல் அதிநவீன நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனை துணை ஆணையா்கள் சிவராமன், கேல்கா் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோா் கொடியசைத்து தொ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கினால் சட்ட நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கி வேலைசெய்ய ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

ஆத்தூரில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

ஆத்தூா்: ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது என ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆத்தூா் நகராட்சி... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

ஆத்தூா்: ஆத்தூரில் விஜயகாந்த் பிறந்த நாளை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் தேமுதிகவினா் திங்கள்கிழமை கொண்டாடினா். இதில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க