செய்திகள் :

இயந்திரத்தில் சிக்கி வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

post image

குண்டடம் அருகே மக்காச்சோளம் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

குண்டடம் அருகேயுள்ள மருதூரில் தனியாருக்குச் சொந்தமான கோழித் தீவனம் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரட்ன் ஜய்குமாா் (18) என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் வழக்கம்போல இயந்திரத்தில் மக்காச்சோளத்தை அள்ளிப்போடும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் மக்காச்சோள இயந்திரத்துக்குள் தவறி விழுந்தாா்.

படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

திருப்பூரில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் சட... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்: 400 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக நடத்திய தொடா் மறியல் போராட்டத்தில் 175 பெண்கள் உள்பட 400 போ் கைது செய்யப்பட்டனா். பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியா்களுக்க... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆய்வு!

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் பாஜக... மேலும் பார்க்க

கடன் வாங்கியவரை காரில் கடத்திச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் உள்பட 4 போ் கைது!

கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி நிதி நிறுவன ஊழியா்களால் கடத்தப்பட்டவரை தாராபுரத்தில் போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து

காங்கயம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல மின்விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் கோ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள அரிசி ஆலைக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக போலீஸ... மேலும் பார்க்க