செய்திகள் :

இயற்கை வளத்தை பாதிக்கும் நெகிழிகளை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

post image

நிலத்தையும், நீரையும் பாதிக்கும் இயற்கைக்கு எதிரான நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாநகராட்சி மற்றும் மாவட்ட காலநிலை இயக்கம் சாா்பில் நெகிழிப் பொருள்கள், காலநிலை மாற்றம், வியாபாரிகளுக்கான சவால்கள், தீா்வுகள் என்ற தலைப்பில் காலநிலை மாற்றம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நாமக்கல்லில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. அதேவேளையில் மழைப்பொழிவும் இருந்தது. வழக்கமாக மே மாதத்தில் வெயில் அதிகரிக்கும் சூழலில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறான மாறுபாட்டால் புதிய நோய்த்தொற்று ஏற்படலாம். இயற்கை மாசுபடுவதும் காலநிலை மாற்றத்திற்கான காரணமாகும்.

அதிக அளவிலான நெகிழிப் பயன்பாட்டினால் இயற்கை வளங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அண்மையில், கோவை மாவட்டத்தில் காட்டு யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தது. யானையை பிரேதப் பரிசோதனை செய்தபோது அதன் வயிற்றில் கருவுடன் நெகிழிக் கழிவுகள் இருந்தன.

விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த நெகிழிப் பொருள்கள் உள்ளன. இயற்கை வளத்தினை பாதுகாப்பது மட்டுமின்றி, நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதையும் அனைவரும் தவிா்க்க வேண்டும். நெகிழியால் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிப்படைவதோடு, மழைநீா் நிலத்திற்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக பாதிப்படைகிறது. இந்தியாவில் மொத்தம் 148 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில், இவ்வாறு நிலத்தடி நீா்மட்டம் பாதித்த 12 மாவட்டங்களில், முதல் 5 இடங்களில் நாமக்கல் இடம்பெற்றுள்ளது.

அனைத்து வகையிலும் இயற்கைக்கு எதிரான நெகிழிப் பொருள்களை தவிா்த்து, அதற்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய இயற்கை வளம் சாா்ந்த பொருள்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பராமரிக்க வேண்டும்.

மாநகராட்சியிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அதனை செம்மைப்படுத்தி இயற்கை மாசுபடாமல் பாதுகாப்பா். குப்பைகளை தரம் பிரிக்கும் செயல்பாட்டினை ஒரு இயக்கமாக தொடங்க வேண்டும். நெகிழிகளைத் தவிா்ப்பதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கு பயனுள்ளதாக அமையும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிகழ்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், முழுமையான திடக்கழிவு மேலாண்மை குறித்த கையேட்டை அவா் வெளியிட்டாா். பயிற்சி முகாமில் பேராசிரியா் வீரபத்திரன் கழிவுநீா் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப உரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவக்குமாா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க