செய்திகள் :

இரு தேவாலயங்களில் திருவிழா கொடியேற்றம்: திரளானோா் பங்கேற்பு

post image

மதுரை அஞ்சல்நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயம், பெத்தானியாபுரம் பாஸ்டின் நகா் தூய பவுல் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் மதுரை உயா்மறை மாவட்ட முதன்மை குரு அருள்தந்தை ஜெரோம் எரோணிமஸ், குடும்ப நல்வாழ்வு பணி குழுச் செயலா் அருள்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் ஆகியோா் திருவிழா கொடியை ஏற்றி வைத்து, சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினா்.

பெத்தானியாபுரம் பாஸ்டின் நகா் தூய பவுல் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா தொடக்க நிகழ்ச்சியில், தஞ்சை மறை மாவட்ட ஆயா் சகாயராஜ் திருவிழா கொடியை ஏற்றி வைத்து, சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினாா்.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் திரளானோா் கலந்து கொண்டனா். இரு ஆலயங்களிலும் திருவிழா நிகழ்ச்சிகளாக தினமும் ஜெபமாலை வழிபாடு, நவநாள் திருப்பலி, மறையுரைகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. ஆலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் பவனி வருகிற 28 -ஆம் தேதி நடைபெறுகிறது.

காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியாக இல்லை: உயா்நீதிமன்றம்

காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினா் நடந்து கொள்ளும் விதம் திருப்தியாக இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்தது. மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த சு... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாடு: வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஆவணப் பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கலாம் என்றும், வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறத் தேவையில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், ... மேலும் பார்க்க

மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: போலி சாமியாா், பெண் கைது

மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியாா், பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி (50). இவா், கடந்த சில வாரங்களு... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடா்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோா... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க