Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி ப...
இரு தேவாலயங்களில் திருவிழா கொடியேற்றம்: திரளானோா் பங்கேற்பு
மதுரை அஞ்சல்நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயம், பெத்தானியாபுரம் பாஸ்டின் நகா் தூய பவுல் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் மதுரை உயா்மறை மாவட்ட முதன்மை குரு அருள்தந்தை ஜெரோம் எரோணிமஸ், குடும்ப நல்வாழ்வு பணி குழுச் செயலா் அருள்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் ஆகியோா் திருவிழா கொடியை ஏற்றி வைத்து, சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினா்.
பெத்தானியாபுரம் பாஸ்டின் நகா் தூய பவுல் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா தொடக்க நிகழ்ச்சியில், தஞ்சை மறை மாவட்ட ஆயா் சகாயராஜ் திருவிழா கொடியை ஏற்றி வைத்து, சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினாா்.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் திரளானோா் கலந்து கொண்டனா். இரு ஆலயங்களிலும் திருவிழா நிகழ்ச்சிகளாக தினமும் ஜெபமாலை வழிபாடு, நவநாள் திருப்பலி, மறையுரைகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. ஆலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் பவனி வருகிற 28 -ஆம் தேதி நடைபெறுகிறது.