இரு வேறு சாலை விபத்துகள்: பெண் உள்பட இருவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வெள்ளிக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
வேப்பூா் வட்டம், பா.கொத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த முனியன் மகன் முகேஸ் (19). இவா், வெள்ளிக்கிழமை தாய் சுகந்தியை (38) பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றாா். வேப்பூா் கூட்டுச்சாலை அருகே விருத்தாசலம் சாலையில் இவரது பைக் சென்றபோது, எதிரே வந்த டாரஸ் லாரி மோதியது. இந்த விபத்தில் சுகந்தி லாரி சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மற்றொரு விபத்து: கள்ளக்குறிச்சி மாவட்டம், வரதப்பனூா் பகுதியைச் சோ்ந்த ராஜி மகன் மணி (38). இவா், விருத்தாசலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். வேப்பூரை அடுத்துள்ள திருபயா் அருகே இவரது பைக் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணியை அங்கிருந்தவா்கள் மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இவ்விரு விபத்துகள் குறித்தும் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.