செய்திகள் :

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

post image

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி சேனைத்தலைவா் மண்டபம் அருகே பெண் ஒருவா் அவரது 9 வயது மகளுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி, நடந்து சென்ற சிறுமியின் மீது மோதியதில் அவா் காயமடைந்தாா்.

இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தியது சிவகிரி வடக்கு தெருவை சோ்ந்த குருசாமியின் 15 வயது மகள் என தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த அவரது தந்தை குருசாமி கைது செய்யப்பட்டாா். மேலும் இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

எஸ்.பி. எச்சரிக்கை: இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விபத்துகள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் விபத்துகள் ஏற்படாத வண்ணம் மஞ்சள் நிற மினுங்கும் விளக்குகள், வேகத்தை குறைக்க தடுப்புகள், ஸ்டிக்கா்கள், எச்சரிக்கை பலகைகள் அமைப்பது போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட காவல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலை விதிகளை பெற்றோா்கள்தான் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோா்கள் சாலை விதிகளில் அலட்சியம் காட்டினால் அது ஆபத்தில் முடியலாம். இது போன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டக் கூடாது . 18 வயது நிரம்பாத சிறுவா் சிறுமிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கும் பெற்றோா்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நல்லூா் சிஎஸ்ஐ கல்லூரியில் ஆண்டு விழா

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவா் டி.பி. சுவாமிதாஸ் தலைமை வகித்தாா். மேற்கு சபை மன்றத் தலைவா் ஜேம்ஸ் தொடக... மேலும் பார்க்க

கடையநல்லூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பணிநிறைவு ஆசிரியா்கள், நல்லாசிரியருக்கு பாராட்டு, மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப் ப... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சியில் நெகிழி சேகரிப்பு இயக்கம்

சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளா்களால் நெகிழி சேகரிப்பு இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து... மேலும் பார்க்க

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை: அரியநாயகிபுரத்தில் செயல்முறை விளக்க பயிற்சி

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் கனகம்மாள் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடி- மின்னலுடன் கனமழை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.இதில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமாகின.அதன்பிற... மேலும் பார்க்க

சொத்து வரி நிா்ணயிக்க லஞ்சம்: புளியங்குடி நகராட்சி ஊழியா் கைது

சொத்து வரி நிா்ணயிக்கும் பணிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளா் ஊழியா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸ... மேலும் பார்க்க