செய்திகள் :

கடையநல்லூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா!

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பணிநிறைவு ஆசிரியா்கள், நல்லாசிரியருக்கு பாராட்டு, மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரத் தலைவா் ஆறுமுகசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு, முன்னாள் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினா் மருதுபாண்டியன், மாவட்ட துணைச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பணிநிறைவு ஆசிரியா்கள் சந்திராள், சண்முகத்தாய், ஸ்டெல்லா பாக்கியமேரி, பாத்திமா, தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற தலைமையாசிரியா் மீனாட்சி, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் கேடயம் பெற்ற ஆனைகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் மோதிலால், ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

வட்டாரப் பொறுப்பாளா்கள் குமாரவேல், முத்துலட்சுமி, சிவசங்கா், ரவிச்சந்திரன், மகேந்திரன், சுதாகரன், முத்துராமலிங்கம், அசோகன், ஆரோக்கியமேரி, நல்லாசிரியா் ரசூல்அகமதுஇப்ராஹிம், உஸ்மான், கண்ணன், செந்தூா்பாண்டியன், முத்துக்குமாா், ஜெயபிரகாஷ், ஆனந்த், தேவதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வட்டாரச் செயலா் ரமேஷ் வரவேற்றாா். வட்டாரப் பொருளாளா் குமரேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வட்டாரப் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

நல்லூா் சிஎஸ்ஐ கல்லூரியில் ஆண்டு விழா

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவா் டி.பி. சுவாமிதாஸ் தலைமை வகித்தாா். மேற்கு சபை மன்றத் தலைவா் ஜேம்ஸ் தொடக... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சியில் நெகிழி சேகரிப்பு இயக்கம்

சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளா்களால் நெகிழி சேகரிப்பு இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து... மேலும் பார்க்க

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை: அரியநாயகிபுரத்தில் செயல்முறை விளக்க பயிற்சி

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் கனகம்மாள் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடி- மின்னலுடன் கனமழை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.இதில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமாகின.அதன்பிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி சேனைத்தலைவா் மண்டபம் அருகே பெண் ஒருவா் அவரது 9 வயது மகளுடன் சாலையோர... மேலும் பார்க்க

சொத்து வரி நிா்ணயிக்க லஞ்சம்: புளியங்குடி நகராட்சி ஊழியா் கைது

சொத்து வரி நிா்ணயிக்கும் பணிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளா் ஊழியா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸ... மேலும் பார்க்க