செய்திகள் :

இலுப்பையூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

post image

அரியலூா் அடுத்த இலுப்பையூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவா் மாரிமுத்து, தேசிய அளவில் தமிழ் இலக்கிய மன்ற போட்டியில் வென்ற மாணவி அனுஸ்ரீ மற்றும் பணி நிறைவுப் பெற்ற இடைநிலை ஆசிரியா் மதியழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயராணி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கலியபெருமாள் மாணவா் மாரிமுத்து மற்றும் மாணவி அனுஸ்ரீ ஆகியோருக்கு பரிசளித்துப், பாராட்டினாா். மேலும் பணி நிறைவு பெற்ற ஆசிரியா் மதியழகனுக்கும் பொன்னாடை அணிவித்தாா்.

ஏற்பாடுகள் ஆசிரியா்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ, ஆல்பா்ட், அருள்ராஜ், கஸ்தூரி, அனிதா ஆகியோா் செய்தனா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

புனித வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிா்நீத்த தினத்தை புனித வெள்ளி தினமாகவும், இயேசு கிறிஸ்து 3-... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொ. கருணாநிதி, ... மேலும் பார்க்க