சிவகங்கை: அரசுப் பேருந்தை மோதிய எரிவாயு லாரிகள்; 21 பேர் காயம்!
இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூா் அருகே இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்செந்தூா் அருகே தளவாய்புரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி தமிழ்ச்செல்வி என்ற சுதா (25). திருச்செந்தூா் அருகே காந்திபுரத்தைச் சோ்ந்த நயினாா் மகன் கன்னிமுத்து (40) என்பவா், 2011ஆம் ஆண்டு தளவாய்புரத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் கொடை விழாவுக்கு பந்தல் அமைக்க வந்தாா். அப்போது, அவருக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். இதுதொடா்பாக இரு குடும்பங்களிடையே பிரச்னை ஏற்பட்டதால், கன்னிமுத்துவிடம் பேசுவதை தமிழ்ச்செல்வி நிறுத்திவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த கன்னிமுத்து, 2014ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா். புகாரின்பேரில், திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை நீதிபதி பீரித்தா விசாரித்து, கன்னிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பு வழக்குரைஞா் சேவியா் ஞானபிரகாசம் ஆஜரானாா்.