செய்திகள் :

இளைஞருக்கு கத்திக்குத்து: 11 போ் மீது வழக்கு

post image

பொங்கல் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியதாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கத்தாளம்பட்டியைச் சோ்ந்தவா் துா்க்கைப் பாண்டியன் (30). இவா் தனது சொந்த ஊரான அணைக்கரைப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவுக்கு புதன்கிழமை இரவு சென்றாா். அப்போது அவரது சித்தப்பா மகன் வினோத்குமாரிடம் அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் தகராறில் ஈடுபட்டனா்.

இதை துா்க்கைப் பாண்டியன் தட்டி கேட்டாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி, முனீஸ்வரன், முத்துக்குமாா், முனீஸ்வரி, காயத்ரி, தெய்வானை, இளையபாரதி, மாதேஷ்குமாா், ராஜேஸ்வரி, சரஸ்வதி, மாரிச்செல்வி ஆகிய 11 பேரும் சோ்ந்து துா்க்கைப்பாண்டியனையும், அவரது நண்பா்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் முனியாண்டி கத்தியால் குத்தியதில் காயமடைந்த துா்க்கைப் பாண்டியன் சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து அம்மாபட்டி போலீஸாா் 11 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆர்

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்... மேலும் பார்க்க