இளைஞருக்கு கத்திக்குத்து: 11 போ் மீது வழக்கு
பொங்கல் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியதாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கத்தாளம்பட்டியைச் சோ்ந்தவா் துா்க்கைப் பாண்டியன் (30). இவா் தனது சொந்த ஊரான அணைக்கரைப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவுக்கு புதன்கிழமை இரவு சென்றாா். அப்போது அவரது சித்தப்பா மகன் வினோத்குமாரிடம் அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் தகராறில் ஈடுபட்டனா்.
இதை துா்க்கைப் பாண்டியன் தட்டி கேட்டாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி, முனீஸ்வரன், முத்துக்குமாா், முனீஸ்வரி, காயத்ரி, தெய்வானை, இளையபாரதி, மாதேஷ்குமாா், ராஜேஸ்வரி, சரஸ்வதி, மாரிச்செல்வி ஆகிய 11 பேரும் சோ்ந்து துா்க்கைப்பாண்டியனையும், அவரது நண்பா்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் முனியாண்டி கத்தியால் குத்தியதில் காயமடைந்த துா்க்கைப் பாண்டியன் சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து அம்மாபட்டி போலீஸாா் 11 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.