இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பைஞ்ஞீலி தெற்கு தெரு பகுதியைச் சோ்ந்தவா் த. சரண் ராஜ் (25) ஹாா்டுவோ்ஸ் கடையில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாகியும் சரண்ராஜ் தன்னுடைய அறையிலிருந்து வெளியே வராததால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் உள்ளே சென்று பாா்த்தபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து நிகழ்விடத்துக்குச் சென்ற மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.