செய்திகள் :

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்!

post image

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஜெருசலேமில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸா போரில் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை விடுவிக்க, ஹமாஸ் அமைப்புடன் அமைதியான முறையில் தீர்வு காண பிரதமர் முனைப்புகாட்டவும் வலியுறுத்தி, நெதன்யாகுவுக்கு எதிரான மக்களின் போராட்டம் இஸ்ரேலில் கடந்த ஒருவாரமாகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப்பிரிவு தலைவரை நீக்குவதற்கான நடவடிக்கையில் பிரதமர் ஈடுபட்டு வருவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பாதுகாப்புப் பிரிவு தலைவராக உள்ள ரோனென் பார், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் ஊடகங்களில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவரை பதவியிலிருந்து நீக்க பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் குடிமக்களில் ஒருபகுதியினர், பிரதமரைக் கண்டித்து திங்கள்கிழமை(மார்ச் 24) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெருசலேமில் அமைந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வ... மேலும் பார்க்க

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக... மேலும் பார்க்க

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை நகை பறித்த இரானி கொள்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதல்களில் 9 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் குவாடா் மாவட்டத்தில் கராச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை கல்மாட் என... மேலும் பார்க்க

துருக்கி போராட்டம்: 1,900-ஐ நெருங்கிய கைது

துருக்கியில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,900-ஐ நெருங்கியுள்ளது. இது குறித்து உள்துற... மேலும் பார்க்க