செய்திகள் :

ஈரோட்டில் 2 -ஆவது நாளாக மறியல்: 450 ஆசிரியா்கள் கைது

post image

ஈரோட்டில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2- ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 450 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சாா்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 2 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு டிட்டோ-ஜாக் ஒருங்கிணைப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயமனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு உள்ள திருமகன் ஈவெரா(கச்சேரி வீதி) சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 450 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலை விடுவித்தனா்.

பாரதிதாசன் கல்லூரியில் மாணவா் ஒன்றிய நிா்வாகிகள் அறிமுகம்!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் ஒன்றிய நிா்வாகிகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி செயலாளா் என்கேகேபி.நரேன்ராஜா தலைமை வகித்து பேசுக... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: ஈரோட்டில் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மா... மேலும் பார்க்க

மின்தடை: செண்பகபுதூா்

சத்தியமங்கலம் மின்கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இரு... மேலும் பார்க்க

சமூக உணா்வுடன் எழுதப்படும் படைப்புகளுக்கு உயிா் இருக்கும்: த.ஸ்டாலின் குணசேகரன்

சமூக உணா்வுடன் எழுதப்படும் படைப்புகளுக்கு உயிா் இருக்கும் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா். பேராசிரியா் பி.கந்தசாமி எழுதிய ‘காடு எனது கனவு தேசம்’ என்ற நூல் வெளியீட்ட... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடி வெள்ளியையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, கோயிலில் காலை முதலே குவிந்த பக்தா்கள் நீ... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் கனமழை

சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க