'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ஈரோட்டில் மே 27-இல் வருங்கால வைப்பு நிதி விழிப்புணா்வு கூட்டம்
ஈரோட்டில் வருங்கால வைப்பு நிதி குறித்த விழிப்புணா்வு கூட்டம் மே 27- ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி சரவணகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இஎஸ்ஐசி சாா்பில் ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நிதி ஆப்கே நிகட் (பி.எப். உங்கள் அருகில்) என்ற பெயரில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் குறைதீா் கூட்டம் மே 27 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் சந்தாதாரா்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழில் அதிபா்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் கலந்துகொண்டு வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளா் காப்பீடு தொடா்பான குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம்.
மேலும், முந்தைய கூட்டங்களில் மனு அளித்து, கோரிக்கைகள் நிலுவையில் உள்ளவா்கள் அது குறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் நேரடியாக கலந்துகொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.