செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சான்றிதழ்கள் மற்றும் மின் இணைப்புக்கான ஆணைகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுக்கான அட்டைகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அது தொடா்பான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இந்த முகாம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சி ராஜராஜன் தெருவில் உள்ள தனியாா் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீதான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின் இணைப்புக்கான ஆணைகள் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுக்கான அட்டைகள் வழங்கப்பட்டன.

மேலும், 38 பள்ளி மாணவா்களுக்கு ஜாதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன், மாநகராட்சி செயலா் காா்த்திவேல்மாறன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க