செய்திகள் :

உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

post image

புது தில்லி: கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அண்மையில் பணி ஓய்வு பெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூன்று காலியிடங்கள் ஏற்பட்டன. இதனால் தலைமை நீதிபதியுடன் சோ்த்து மொத்தம் 34 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் 31 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

நீதிபதிகள் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இரு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

5 உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்: ஐந்து உயா்நீதிமன்ற நீதிபதிகளை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்தது.

அதன்படி தற்போது மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சய் சச்தேவாவை அதே உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு, கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி அசுதோஷ்குமாா் குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி அதே உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி தா்லோக் சிங் சௌஹான் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்தது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க