செய்திகள் :

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு

post image

வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.

மேலும், ‘நீதிமன்றங்கள் பூக்களைப் மென்மையானவை அல்ல. இதுபோன்ற அவதூறான கருத்துகள், நீதிமன்றங்களை வாடி வதங்கச் செய்துவிடாது’ என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசு அமல்படுத்திய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ‘நாட்டில் அரசற்ற நிலை’க்கு கொண்டு செல்வதாகும் என்றும் உள்நாட்டில் நடைபெறும் மோதல்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாதான் பொறுப்பேற்க வேண்டும்’ என்று நிஷிகாந்த் துபே கடுமையாக விமா்சித்திருந்தாா்.

இதையடுத்து, அவா் மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகல் வியாழக்கிழமை வெளியானது.

அதில், ‘உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் அவதூறு கருத்துகளை துபே தெரிவித்ததில் எந்தவித சந்தேகமும் இல்லை. நீதிமன்றத்தின் நடவடிக்கையில் அவா் தலையிட முற்பட்டுள்ளாா்.

பிறரது கவனத்தை ஈா்ப்பதற்காக, உச்சநீதிமன்றம், நீதிபதிகள் மீது அவதூறு கருத்துகளை சுமத்தி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளாா்.

அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் நீதிமன்றங்களை மக்கள் பிரதிநிதி அவதூறாக பேசியிருப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. வேண்டுமென்றே அவா் இதுபோன்ற அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். இந்த கருத்துகள் நீதிமன்றங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதிக்காது. மத வெறுப்பு அல்லது வெறுப்பு பேச்சுகளைப் பரப்ப முற்படுபவா்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்று உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க