செய்திகள் :

உடல் தான இயக்கம் பண்பாட்டுப் புரட்சி

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடங்கியுள்ள உடல் தான இயக்கம் ஒரு பண்பாட்டுப் புரட்சி என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொ) வீரமணி, துணை முதல்வா் கீதாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உடல் தான நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடங்கியுள்ள உடல் தான இயக்கம் தமிழ்நாட்டில் ஒரு பண்பாட்டுப் புரட்சியை உருவாக்கும். இந்திய நாட்டில் உடல் தானம் செய்வது மிகவும் அரிய நிகழ்வாக இருந்தது. இதை மாற்றி அமைத்த பெருமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உள்ளது. ஏற்கெனவே கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் என பல தானங்கள் செய்து வருகிறோம். ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில், அதிகமான ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, பல உயிா்களை பாதுகாப்பதற்கு துணை புரிந்திருக்கின்றனா்.

ஜாதி, மதம், உறவினா் என குறுகிய மனபான்மை இல்லாமல், அடையாளம் தெரியாதவா்களின் உயிரைக் காக்க, இந்த ரத்த தானம் பயன்பட்டிருக்கிறது. மருத்துவ மாணவா்கள் பலா், தங்களது உடல் சமூகத்துக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தானம் செய்துள்ளனா்.

மனித சமுதாயம் பயன்பெற, இந்தப் புரட்சி மேலும் வலுவடைய வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியின்போது, இரா.சச்சிதானந்தம், அவரது மனைவி கவிதா உள்ளிட்ட 11 தம்பதியா்களும், மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் உள்பட 66 போ் உடல் தானம் செய்தனா்.

பழனியில் 1.40 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி கோயில் அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்துக்கு கோயில் இணை ஆணையரை தக்காராக நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அந்த இடத்தை கோயி... மேலும் பார்க்க

இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: ... மேலும் பார்க்க

தொழில்சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்களின் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். பழனியை அடுத்த தாளையூத்து, வாகரை பகுதிகளில் ஆயத்... மேலும் பார்க்க

பழனி கோயிலில் காா்த்திகை திருநாள்: பெண்கள் 108 திருவிளக்கு பூஜை

பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆவணி மாத காா்த்திகை தினத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதை முன்னிட்டு அதிகாலையிலே நான்கு மணிக்கு கோயில் சந்நிதி திறக்கப்பட்டு மூலவருக... மேலும் பார்க்க

பல்கலை. கைப்பந்துப் போட்டி: பழனி கல்லூரி அணி வெற்றி

அன்னைதெரசா மகளிா் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டியில் பழனியாண்டவா் கலை பண்பாட்டுக் கல்லூரி வெற்றி பெற்றது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 14 கல்லூரிகளுக்கு... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்றொரு நபா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கே.கீர... மேலும் பார்க்க