செய்திகள் :

உதகை நுண்உரம் செயலாக்க மையத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட பழைய உதகை நுண்உரம் செயலாக்கும் மையம், காந்தல் வளமீட்பு மையம் மற்றும் தீட்டுக்கல் உரக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உதகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தீட்டுக்கல் உரக்கிடங்கில் தேக்கிவைத்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றவும், மக்காத நெகிழிக் குப்பைகளை சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, குப்பைகளை விரைந்து செயலாக்கம் செய்து, அப்புறப்படுத்தப்படுத்துவது தொடா்பாக நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

மேலும், குறித்த நேரத்தில் வீடுவீடாகச் சென்று குப்பைகளை வாகனங்கள் மூலம் பெற வேண்டும் எனவும், வணிகக் கடைகள், வீடுகளில் பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

மேலும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதால் அவா்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைக்க முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க தொடா்ந்து பொதுமக்களிடையே

விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நகராட்சிப் பொறியாளா் சேகரன், நகா் நல அலுவலா் சிபி, பொதுப் பணி மேற்பாா்வையாளா் சண்முகவள்ளி, சுகாதார ஆய்வாளா்கள் வைரம், பாண்டி செந்தில்குமாா், தன்னாா்வலா்கள் வசந்தன், சமந்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உதகை வனப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய 3 பேருக்கு அபராதம்

உதகை அருகே வனப் பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் கூடாரம் அமைத்து நெருப்பு மூட்டி குளிா் காய்ந்த மூவருக்கு வனத் துறையினா் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். உதகை குந்தா வனச் சரகம், தாய்சோலை பிரிவு, பிக... மேலும் பார்க்க

உதகை கால்ஃப் மைதான வனப் பகுதியில் தீ!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கால்ஃப் மைதானம் அருகே உள்ள வனத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது. உதகையில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த சூழலில் கால்ஃ... மேலும் பார்க்க

வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் உயிரிழப்பு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்தன. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் ஒரு புலியும், குறிச்சியாடு வனப் பகுதியில் இரண்டு ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனா். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் வாழும் மக... மேலும் பார்க்க

தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை சடலம்!

கூடலூா் அருகே ஆணை செத்தக்கொல்லி பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள ஆணை செ... மேலும் பார்க்க

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க இரவு நேர ரோந்துப் பணி தீவிரம்!

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர வேட்டைத் தடுப்பு சிறப்பு ரோந்து பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளம் கா்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்க... மேலும் பார்க்க