தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை சடலம்!
கூடலூா் அருகே ஆணை செத்தக்கொல்லி பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள ஆணை செத்தக்கொல்லி தனியாா் தேயிலைத் தோட்டத்துக்கு தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலை வந்தபோது, சிறுத்தை இறந்துகிடப்பது தெரியவந்தது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு நடத்தினா். அப்போது, சிறுத்தையின் உடலில் காயங்கள், கீரல்கள் இருப்பது தெரியவந்தது. ஆகவே, இரண்டு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறுத்தை இறந்திருக்கலாம் என்பதும், இறந்தது ஆறு வயது ஆண் சிறுத்தை என்றும் தெரிவித்தனா்.
மேலும், உடற்கூறாய்வு அறிக்கையில்தான் சிறுத்தை எவ்வாறு இறந்தது என்பது தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.