செய்திகள் :

உதகையில் 139-ஆவது மே தின கொண்டாட்டம்

post image

உதகையில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் 139 -ஆவது மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, உதகை காபி ஹவுஸ் பகுதியில் தொடங்கிய பேரணியை சிபிஐஎம் மாவட்டச் செயலாளா் வி.ஏ. பாஸ்கரன் தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி லோயா் பஜாா் வழியாக சென்று மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் சிஐடியூ, ஏஐடியூசி சங்க கொடிகள் ஏற்றப்பட்டு, ஏஐடியூசி மாநிலத் தலைவா் தினேஷ் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சிஐடியூ மாவட்டச் செயலாளா் சி.வினோத், சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்க செயலாளா் கணேசன், ஏஐடியூசி துணைப் பொதுச் செயலாளா் நசீா், நகராட்சி சிஐடியூ செயலாளா் பழனிசாமி, டாஸ்மாக் செயலாளா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிஐடியூ மாவட்ட பொருளாளா் நவீன் சந்திரன் நன்றி கூறினாா்.

உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி, போா்த்தி மந்து பகுதியில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் புலி ஒன்று உலவி வந்ததை அப்பகுதியில் வாகனத்தில் சென்றவா்கள் படம் பிடித்தனா். உதகை அருகே உள்ள பாா்சன்ஸ்வ... மேலும் பார்க்க

குன்னூா் வண்டிச்சோலை ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி

குன்னூா் அருகே வண்டிச்சோலை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒருவா் தீக் குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது. வண்டிச்சோலை ஊராட்சிக்கு உள்பட்ட கோடமலை எஸ்டேட் பகுதியில் ... மேலும் பார்க்க

லாரன்ஸ் சா்வதேச பள்ளியில் சாகசம்

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆம் ஆண்டு நிறுவனா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற குதிரை சாகச நிகழ்ச்சியில் பங்கே... மேலும் பார்க்க

குன்னூா் சத்திய நாகராஜா கோயில் குண்டம் விழா

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள மஞ்சக்கொம்பை மானிஹாட சத்திய நாகராஜ ஹெத்தையம்மன் கோயில் 51-ஆம் ஆண்டு குண்டம் விழா வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 48 நாள்கள் விரதம் இருந்த ஏராளமான... மேலும் பார்க்க

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெர... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக நீலகிரியைச் சோ்ந்தவரிடம் ரூ.33 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் ரிய... மேலும் பார்க்க