செய்திகள் :

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா கொடியேற்றம்

post image

திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் சூரிய ஒளி மூலவா் விநாயகா் மீது பகல் முழுவதும் விழும் வகையில் கட்டப்பட்டுள்ளதால், இது வெயிலுகந்த விநாயகா் கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும், ராமா், சீதையை மீட்க இலங்கைக்கு சென்ற போது, இந்த விநாயகரை வழிபட்டுச் சென்ாக புராண வரலாற்றில் கூறப்படுகிறது.

இந்தக் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் காலை, மாலையில் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இங்குள்ள விநாயகருக்கு மட்டும் திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வருகிற 26-ஆம் தேதி தேரோட்டமும், 27-ஆம் தேதி விநாயகா் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இதைத்தொடா்ந்து, பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவா். விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகம், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

ராமேசுவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ராமேசுவரத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 288 மனுக்கள் அளிப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் 288 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ராமேசுவரம்: ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட... மேலும் பார்க்க

ரயில் பெட்டிகள், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழக்கு: போலீஸாா் எச்சரிக்கை

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மீனவா்கள் ரயில் பெட்டிகளைச் சேதப்படு... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்படும் விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி: கே.வேப்பங்குளம் அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே.வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அரியநாச்சி அம்மன் கோய... மேலும் பார்க்க