செய்திகள் :

ரயில் பெட்டிகள், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழக்கு: போலீஸாா் எச்சரிக்கை

post image

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மீனவா்கள் ரயில் பெட்டிகளைச் சேதப்படுத்தியும், பயணிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, அனைத்து மீனவ சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை (ஆக. 19) ராமேசுவரம்-தாம்பரம் ரயிலை தங்கச்சிமடத்தில் மறித்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ரயில் நிலையங்கள், 6 ரயில்வே கடவுப்பாதைப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ரயில் செல்லும் வழித்தடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் ரயில் பெட்டிகளைச் சேதப்படுத்தியும், பயணிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தினால், வழக்குப் பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தெரிவித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

ராமேசுவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ராமேசுவரத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம் 288 மனுக்கள் அளிப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் 288 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ராமேசுவரம்: ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்படும் விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி: கே.வேப்பங்குளம் அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே.வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அரியநாச்சி அம்மன் கோய... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா கொடியேற்றம்

திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க