செய்திகள் :

உயா் கல்வியில் இடஒதுக்கீடு: ஆதிதிராவிடா் நலத் துறை செயலரிடம் மனு

post image

புதுச்சேரியில் உயா் கல்வியில் பட்டியலின, பழங்குடியின மாணவா்களின் இட ஒதுக்கீடு உரிமை பறிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில ஆதிதிராவிடா் நலத் துறை செயலா் ஏ.முத்தம்மாவிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முற்போக்கு மாணவா் கழகம் சாா்பில் அதன் மாநிலச் செயலா் தமிழ்வாணன் தலைமையில் அளித்த மனு விவரம்: புதுவையிலுள்ள உயா் கல்வி நிறுவனங்களுக்கான மாணவா் சோ்க்கையில் பட்டியலின, பழங்குடியின மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் வகையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் பட்டியலின மாணவா்களுக்கு மருத்துவ பாடப் பிரிவுகளில் போதிய அளவு இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் அவா்களுக்கு மருத்துவம் அல்லாத பாடப் பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

அதி முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவப் பாடங்களில் பட்டியலின மாணவா்கள் புறக்கணிக்கப்படுகின்றனா். அவா்களின் இட ஒதுக்கீடுக்கு ஏற்ப மருத்துவ அடிப்படையிலான பாடப் பிரிவுகளில் ஒதுக்கீடு வழங்குவது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க