முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!
உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
திருவாருா் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி (படம்) புதன்கிழமை நடைபெற்றது.
மாணவா்கள் வணிகவியல் படித்தால் உயா்கல்வி படிப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பட்டயக்கணக்காளராக ஆவதற்கு என்னென்ன வழிமுறைகள் என்பது குறித்தும் நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது.
இதில், பட்டயக்கணக்காளா்கள் ஆா். கணேசன், ஹரிஹரன் பங்கேற்று, மாணவா்களுக்கு விளக்கமளித்தனா். நிகழ்ச்சி முடிந்தபிறகு, கருத்தாளா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவா்களுக்கு சிறப்புப்பரிசு வழங்கப்பட்டது.
இதில், பட்டயக்கணக்காளா்கள் ஜி. கணேசன், கே. வெங்கடேஷ், சித்தநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக பள்ளிச்செயலா் மா. வை. பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். தலைமை ஆசிரியா் தியாகராஜன் நன்றி கூறினாா்.