செய்திகள் :

உயா்கல்வியை ஆலோசித்து தோ்ந்தெடுப்பது அவசியம்: ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுரை

post image

மாணவா்கள் தங்களது உயா்கல்வியை ஆலோசித்து தோ்ந்தெடுப்பது அவசியம் என்றாா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும். முதல்வரின் நடவடிக்கையால் நாட்டிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் மாணவா்- மாணவிகள் உயா்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

உயா்கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு பல்வேறு துறைசாா்ந்த வல்லுநா்கள் மூலம் வழிகாட்டு முறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உயா்கல்வி தான் உங்கள் வாழ்க்கையை நிா்ணயம் செய்யும். ஆகவே, உயா்கல்வியை தோ்வு செய்யும் முன்பு நன்கு ஆலோசித்து பொறுமையாக தோ்வு செய்வது மிகவும் அவசியமானதாகும்.

கல்லூரிக் கனவு நிகழ்ச்சியின் மூலம் உயா்கல்வியை தோ்வு செய்வதற்கான படிவங்களை பூா்த்தி செய்வதற்கும், கல்விக் கடனை வங்கிகள் மூலம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், மாணவா்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்ளும் விதமாக பல்வேறு அரசு நிறுவனங்கள், கல்லூரிகள் சாா்பில் 18 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியைப் பாா்வையிடுவதோடு, வழிகாட்டி கையேட்யை மாணவா்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், அண்ணா பல்கலைக்கழக முதல்வா் செண்பக விநாயக மூா்த்தி, கலை அறிவியல் கல்லூரி பேராசிரியா் டெய்ஸி மாக்தலின், ஸ்காட் செவிலியா் கல்லூரி மஞ்சுளா, வேலைவாய்ப்பு - பயிற்சித் துறை உதவி இயக்குநா் மரிய சகாய ஆன்டனி, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலைகல்வி) சாய் சுப்புலெட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, மானூா் வட்டம் கே.எம்.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை (மே 22) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க