செய்திகள் :

உரிய ஆவணங்களின்றி கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்

post image

உரிய ஆவணங்களின்றி கோவையில் இருந்து கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கோவை காட்டூா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையில் தலைமைக் காவலா்கள் சிவராஜ், ஜோன்ஸ் ஆகியோா் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, கோவை காந்திபுரம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்தில் கண்காணித்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.

அவா்களில் திருச்சூா் மாவட்டம், குருவாயூரைச் சோ்ந்த சத்தியவான் (43) என்பவா் கோவையிலிருந்து கேரளத்துக்கு செல்வதாக கூறியுள்ளாா். இதையடுத்து அவரின் பைகளை சோதனை செய்தபோது, அதில் செய்தித்தாள்களில் சுற்றப்பட்டிருந்த பாா்சலை பிரித்து பாா்த்தபோது, அதில் ரூ.35 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை கேரளத்துக்கு கொண்டுச் செல்வதாக கூறியுள்ளாா்.

பின்னா் அவரை காட்டூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், பணத்தைப் பறிமுதல் செய்து வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் விவரங்களை பதிவிடலாம்

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் தங்கள் விவரங்களை இணையப் பக்கத்தில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட... மேலும் பார்க்க

வால்பாறையில் மே 14-இல் மக்கள் தொடா்பு முகாம்

வால்பாறை வட்டம் ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் மே 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ந... மேலும் பார்க்க

கோவையில் ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

கோவைக்கு வந்த தமிழக ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வி... மேலும் பார்க்க

கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில்... மேலும் பார்க்க

உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு இன்று தொடக்கம்: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

உதகையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்கும் தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா். உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாட... மேலும் பார்க்க