செய்திகள் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டி நாளை(ஜூன் 11) இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவிருக்கின்றன.

கடந்த இரண்டு தொடர்களிலும் இரண்டாமிடம் பிடித்த இந்திய அணி, இந்தத் தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் ஆகிய தொடர்களால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால், மூன்றாம் இடம் பிடித்தது.

முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு 36 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படவிருக்கின்றன. இது இந்திய மதிப்பில் ரூ. 30 கோடியாகும். அதேபோன்று இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 21 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 18 கோடி) கிடைக்கும். இது கடந்தாண்டைவிட 16 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும்.

மூன்றாமிடம் பிடித்த இந்திய அணிக்கு 14.40 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைக்கும். இது இந்திய மதிப்பில் ரூ.12.32 கோடியாகும்.

மற்ற அணிகளுக்கான பரிசுத் தொகை விவரம்

  • முதல் பரிசு - 36 லட்சம் டாலர்கள்

  • 2-வது பரிசு - 21 லட்சம் டாலர்கள்

  • 3-வது இடம் - இந்தியா (14.40 லட்சம் டாலர்கள்)

  • 4-வது இடம் - நியூசிலாந்து (10 லட்சம் டாலர்கள்)

  • 5-வது இடம் - இங்கிலாந்து (9, 60,000 டாலர்கள்)

  • 6-வது இடம் - இலங்கை (8,40,000 டாலர்கள்)

  • 7-வது இடம் - வங்கதேசம் (7,20,000 டாலர்கள்)

  • 8-வது இடம் - மேற்கிந்திய தீவுகள் (6,00,00 டாலர்கள்)

  • 9-வது இடம் - பாகிஸ்தான் (4,80,000 டாலர்கள்)

இதையும் படிக்க: பெண் நடுவருடன் வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்!

ஆஸி. பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ககிசோ ரபாடா

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ... மேலும் பார்க்க

தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது: மிட்செல் ஸ்டார்க்

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க ... மேலும் பார்க்க

அசத்தும் தென்னாப்பிரிக்கா: 4-ஆவது ஓவரில் முதல் ரன் எடுத்த ஆஸி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் 3 ஓவர்கள் ரன்கள் இல்லாமல் மெய்டன் ஆனது. ஆஸி.க்கு முதல் ரன் 3.3ஆவது ஓவரில்தான் கிடைத்தது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப் போட்டி: தெ.ஆ. பந்துவீச்சு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லண்டனில் டபிள்யூடிசி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் டெம்பா பவுமா... மேலும் பார்க்க

இங்கிலாந்து லயன்ஸில் விளையாடிய 19 வயது வீரருக்கு தேசிய அணியில் இடம்!

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய 19 வயது இளம் வீரருக்கு தேசிய அணியில் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க

நேற்று ஓய்வு.. இன்று நியூயார்க் அணி கேப்டன்..! பூரனின் புதிய பரிமாணம்!

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அடுத்த நாளே நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வ... மேலும் பார்க்க