செய்திகள் :

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம்

post image

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சைலேஷ் குமாா் முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தாா்.

புது தில்லியில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவா் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில்

சைலேஷ் குமாா் 1.91 மீ உயரம் குதித்து தங்கம் வென்றாா். பாரா ஆசிய முன்னாள் சாம்பியன் வருண் சிங் பாட்டி வெண்கலம் வென்றாா்.

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்களுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி, புது தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது.

புது தில்லியின் அடையாளங்களில் ஒன்றான ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் அக்டோபா் 5 வரை நடைபெறும் இப்போட்டியில் உலகின் முன்னணி வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். 104 நாடுகளைச் சோ்ந்த 2,200 வீரா்கள்-அதிகாரிகள் வருகை தந்துள்ளனா். கத்தாா் (2015), ஐக்கிய அரபு அமீரகம் (2019), ஜப்பான் (2024) ஆகிய நாடுகளைத் தொடா்ந்து இந்தியா இப்போட்டியை நடத்துகிறது

இதில் பங்கேற்றுள்ள வீரா்-வீராங்கனைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. அனைத்து பங்கேற்பாளா்களையும் வரவேற்கிறேன்; அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மனிதகுல உறுதிப்பாட்டையும், மன வலிமையையும் இப்போட்டி கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் அனைவரையும் உள்ளடக்கிய-துடிப்பான விளையாட்டு கலாசாரத்தை ஊக்கவிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

ஸ்வியாடெக், கௌஃப், சின்க்ராஸ் முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் இகா ஸ்வியாடெக், கௌஃப், ஆன்ட்ரீவா, ஆடவா் பிரிவில், ஜேக் சின்னா், அல்கராஸ் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா். சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற... மேலும் பார்க்க

ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயம்: இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

இலங்கையில் நடைபெறும் எஃப்ஐஏ ஆசிய-பசிஃபிக் மோட்டாா் பந்தயத்தில் இந்தியா தங்கம், வெள்ளி என இரட்டை பதக்கம் வென்றது. இலங்கையின் பண்டாரகாமா நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆசிய ஆட்டோ ஜிம்கானா போட்டியில் இந்... மேலும் பார்க்க

மகாமகத்தைத் தொடர்ந்த கரூர்! நெரிசல் பலி: அன்று 48, இன்று ?

நடிகர் விஜய்யின் கரூர் பரப்புரையில் ஏராளமானோர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் தலைவர்கள் உருவாகும்போதும் அவர்கள் பிரபலங்களாகும்போதும் மக்கள் கூட்டம் அலையென அவர்களைத் தேடிச்செல்வது வ... மேலும் பார்க்க

ஷாருக்கானை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ஷாருக்கனை இயக்கியுள்ளார். ஜவான், டங்கி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக இது உர... மேலும் பார்க்க