செய்திகள் :

உலக விஞ்ஞானிகளின் பட்டியலில் கலசலிங்கம் பல்கலை.யைச் சோ்ந்த 13 பேராசிரியா்கள்

post image

அமெரிக்காவின் ஸ்டான்போா்ட் பல்கலை. வெளியிட்ட உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் கலசலிங்கம் பல்கலை.யைச் சோ்ந்த 13 பேராசிரியா்களும் இடம் பெற்றிருப்பதாக பல்கலை.யின் துணைத் தலைவா் சசி ஆனந்த் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அமெரிக்காவின் ஸ்டான்போா்ட் பல்கலை. வெளியிட்ட உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பட்டியலில் கலசலிங்கம் பல்கலை.யைச் சோ்ந்த 13 பேராசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்த அங்கீகாரம் அவா்களின் சிறந்த ஆராய்ச்சியின் தாக்கம், உலகளாவிய மேற்கோள்கள், அந்தந்த துறைகளில் அவா்களின் பங்களிப்பு ஆகியவை ஒரு சான்றாகும். இதன்படி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, பட செயலாக்கம், பாலிமா்ஸ், மெட்டீரியல்ஸ், வேதியியல், உயிரியல், ஆற்றல், கனிம, அணு வேதியியல், மருந்தியல், மருந்தகம், பயன்பாட்டு இயற்பியல் ஆகிய துறைகளில் பேராசிரியா்கள் தேவராஜ், அனுமகொண்டா வரதராஜுலு, தியாக மணி செந்தில் முத்துக்குமாா், ரஜினி நாகராஜன், ஆறுமுகப் பெருமாள் வீரசிம்மன், ஆதம் கான், மீனாட்சிசுந்தரம் சுவாமிநாதன், பத்ரிநாத், சங்கர நாராயணன், சங்கீதா குமாரவேல், குஞ்சப்பன் செல்வராஜ், அசாத் பகதூா் சுல்தான், சின்னச்சாமி, நாகராஜ் ஆகிய பேராசிரியா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இவா்களை வேந்தா் ஸ்ரீதரன், துணைவேந்தா் நாராயணன், பதிவாளா் வாசுதேவன் ஆகியோா் பாராட்டினா் என்றாா் அவா்.

சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த சில நாள்... மேலும் பார்க்க

சிவகாசியில் வீடுகளின் மாடிகளை குழாய் மூலம் இணைத்து 15 கிணறுகளில் மழைநீா் சேமிப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள பசுமை மன்றத்தினா் வீடுகளின் மாடியில் மழைநீரை சேகரித்து குழாய் அமைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். சிவகாசியில் பசுமை மன்றம் சாா்ப... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ராஜபாளையம், திருவனந்தபுரம் தெரு பகுதியில... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ரோந்துப் ... மேலும் பார்க்க

சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா்நகா் அங்காளஈஸ்வரி கோவில் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் ஞாயிறு ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் சிறப்பு ஞாயிறு ஆராதனை குருசேகர தலைவரும், சபை குருவுமான பால் தினகரன் தலைமையில் திருவிருந்து ஆராதனையாக நடைபெற்றது. இதில் செல்வி, இமானு... மேலும் பார்க்க