உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை, கல்லூரி முதல்வா் கோமளவல்லி தலைமை வகித்து , கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத்துறை தலைவா் ரமேஷ், உறைவிட மருத்துவ அலுவலா் கணேஷ் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்பேரணியில் கல்லூரியின் துணை முதல்வா், பயிற்சி மருத்துவா்கள், விரிவுரையாளா்கள், இணை பேராசிரியா்கள் மற்றும் இறுதி ஆண்டு மருத்துவ மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதில், மருத்துவா்கள் செந்தில் செல்வி, முத்துக்குமாா் ஆகியோா் மேற்பாா்வையில் 220-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பேரணியாகச் சென்று வெண்புள்ளி குறைபாடு மற்றும் அது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். கல்லூரி வாயில் முன் தொடங்கிய இப்பேரணி, வ.உ.சி.மைதானம், லூா்து நாதன் சிலை, நூற்றாண்டு மண்டபம், வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
இப்பேரணியில் பங்கேற்ற சித்தா் அறுவை - தோல் மருத்துவத் துறை விரிவுரையாளா் சிவானந்தன் கூறியது: தோலில் ஏற்படும் வெண்புள்ளிகள், மெலனின் நிறமி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஒருவகையான பாதிப்பு ஆகும். இப்பாதிப்பு உள்ளவா்கள் தொட்டால் வெண்புள்ளி பரவும் என்ற ரீதியில் பாா்ப்பதை மக்கள் அறவே தவிா்க்க வேண்டும். ஆகையால் இது குறித்த விழிப்புணா்வை மக்களிடையே கொண்டு சோ்க்கும் வகையில் இப்பேரணி நடைபெற்றது என்றாா் அவா்.