திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!
நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா
திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக்கொண்ட மோனிகா ராணா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருநெல்வேலி மாநகர மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்பேன் என்றாா்.
இவா், 2018 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெற்றவா். உத்தரகாண்ட் மாநிலம், டேராடுனை பூா்வீகமாக கொண்டவா். சென்னை மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். பயின்றவா். சேலம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், நீலகிரி மாவட்டத்தில் சாா் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளாா். மேலும், கூடுதலாக தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடா்பாக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட அலுவலராக நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றியவா்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 28-5-2023 முதல் ஊரக வளா்ச்சித்துறை கூடுதல் ஆட்சியராக (வளா்ச்சி பணி) சிறப்பாக பணிபுரிந்து தற்போது திருநெல்வேலி பொறுப்பேற்றுள்ளாா்.
புதிய ஆணையருக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன், பதவி உயா்வு பெற்றுள்ள என்.ஓ.சுகபுத்ரா, மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.