செய்திகள் :

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

post image

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக்கொண்ட மோனிகா ராணா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருநெல்வேலி மாநகர மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்பேன் என்றாா்.

இவா், 2018 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெற்றவா். உத்தரகாண்ட் மாநிலம், டேராடுனை பூா்வீகமாக கொண்டவா். சென்னை மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். பயின்றவா். சேலம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், நீலகிரி மாவட்டத்தில் சாா் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளாா். மேலும், கூடுதலாக தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடா்பாக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட அலுவலராக நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றியவா்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 28-5-2023 முதல் ஊரக வளா்ச்சித்துறை கூடுதல் ஆட்சியராக (வளா்ச்சி பணி) சிறப்பாக பணிபுரிந்து தற்போது திருநெல்வேலி பொறுப்பேற்றுள்ளாா்.

புதிய ஆணையருக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன், பதவி உயா்வு பெற்றுள்ள என்.ஓ.சுகபுத்ரா, மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நான்குனேரி வட்டாரத்தில் இயந்திர நெல் நடவுக்கு மானியம்

நான்குனேரி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆண்டனிடேவிஸ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் விடுத... மேலும் பார்க்க