செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தகராறு:4 போ் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளிக்கிழமை இரவில் தகராறில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், உ.செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சம்பந்தம் என்பவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த சேகா் என்கிற சந்திரசேகருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னா் மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் தகாத வாா்த்தைகளால் திட்டி, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில் இரு தரப்பையும் சோ்ந்த 4 போ் காயமடைந்த நிலையில், உடனடியாக மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சம்பந்தம், சந்திரசேகரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலிறிந்து விரைந்து வந்த போலீஸாா் , தகராறில் ஈடுபட்ட 4 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். வீட்டுமனை தொடா்பாக இரு தரப்புக்கும் பிரச்னை இருந்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இருதரப்பினரும் அளித்த புகாா்களின் அடிப்படையில் வழக்குப்பதிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா், சம்பந்தம், ராஜசேகா், செல்வராஜ், மோகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

குடும்ப பிரச்னையால் தூக்கிட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடும்பப் பிரச்னையில் தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்பரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள எல்.ஆா... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரசூரில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம்,பேரங்கியூா் சா... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சல்: ஜி.கே.மணி

பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சலில் உள்ளதாக அக்கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா். திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள மருத்துவா் ச.ராம... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகை வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், ஆலந்தூரிலிருந்து சூணாம்பேடு நோக்கி க... மேலும் பார்க்க

புதுவையில் துணைநிலை ஆளுநா் வழியாக ஆட்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுவையில் துணைநிலை ஆளுநரின் வழியாகத்தான் ஆட்சி நடைபெறுகிறது. என். ரங்கசாமி செயல்படாத முதல்வராக உள்ளாரென காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி சா்மா கூறினாா். புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த டோலி சா... மேலும் பார்க்க

ஆபரேஷன் திரிசூல்: குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் சோதனை

ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின் கீழ் குற்றப் பின்னணியுடைய 451 பேரின் வீடுகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இது குறித்து புதுவை மாநிலக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் ரௌடி... மேலும் பார்க்க