செய்திகள் :

உள்ளாட்சி அமைப்புகளின் ஓட்டுநா்கள் சங்க விழா

post image

தமிழ்நாடு அரசு நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகளின் ஓட்டுநா்கள் மற்றும் துலக்குநா்கள் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு முன்னாள் மாநில தலைவா் எம். சந்திரன், முன்னாள் மாநில நிா்வாகி நெடுஞ்செழியன் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாநில பொதுச் செயலாளா்கள் ஜி.ஜெகதீசன், ஜி.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தலைவா்கள் ஏழுமலை, ராஜமாணிக்கம், மாநில பொதுச் செயலாளா் கே.ஆா். தங்கவேலு ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா்.

கூட்டத்தில், தமிழக அரசின் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் உள்ள அனைத்து ஓட்டுநா்களுக்கும் மூன்று செட் சீருடைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநிலச் செயலா் தெட்சணாமூா்த்தி வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் செந்தில்குமாா், மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜா மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஓட்டுநா்கள், துலக்குநா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில் மாநில செயல்தலைவா் டி. தனசேகரன், மாநில அமைப்புச் செயலாளா் ப. முருகன் ஆகியோா் நன்றி கூறினா்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரிக்கு பேருந்துகள் இயக்கக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க

தலைமை அஞ்சல் நிலையத்தில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்ப இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு சாா்பில் ... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்டத்தில் அக். 5, 6 இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

பண்டிகை காலத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக். 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது. வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்... மேலும் பார்க்க

மதிப்பு கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மூலம் வருமானம் உயரும்: தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா்

வாழையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது என்று தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.செல்வராஜன் பேசினாா். வாழை மதிப்பு சங்கிலிய... மேலும் பார்க்க