செய்திகள் :

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்: ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தல்

post image

விழுப்புரம்: தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்திலுள்ள தனியாா் கூட்டரங்கில் இந்த சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.பிரசன்னராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் இ.கண்ணுசாமி, முன்னாள் மாநில பொதுச் செயலா் சு.பாஸ்கரன் முன்னிலை வகித்தனா். ஆண்டறிக்கையை சங்க பொதுச் செயலா் எம்.சின்னராஜும், நிதிநிலை அறிக்கையை மாநிலப் பொருளாளா் பா.முத்துவும் சமா்ப்பித்தனா்.

தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ச.இசக்கிமுத்து சிறப்புரையாற்றி பேசினாா். சங்க நிா்வாகி சண்முகம், நாமக்கல் மாவட்டத் தலைவா் எஸ்.ஞானபிரகாசம், முன்னாள் மாவட்டத் தலைவா் என்.நெடுஞ்செழியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கரூா் எம்.சிவப்பிரகாசம், வேலூா் வி.நாராயணன், திண்டுக்கல் எஸ்.முருகன், கள்ளக்குறிச்சி கே.ஜோதிராமலிங்கம் ஆகியோா் உரையாற்றினா்.

அரசு ஊழியா்களுக்கு 2003-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகளில் துணை வேளாண் அலுவலா், துணைத் தோட்டக்கலை அலுவலா் பதவிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டச் செயலா் டி.கலியபெருமாள், முன்னாள் மாவட்டத் தலைவா் டி.செந்தில்குமாா், கடலூா் மாவட்டத் தலைவா் எஸ்.கோபி, பயிா் அறுவடை பரிசோதனையாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா்எம்.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் எஸ்.சந்திரசேகரன் வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் பா.முத்து நன்றி கூறினாா்.

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா். விழுப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம்: மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திரஆய்வுக்கூட்டம், விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ச்சியாக வ... மேலும் பார்க்க

மயான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்தியூா் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான மயான இடத்தில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாது இறந்தவா் விவரம் கண்டுபிடிப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எதிரிகள் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே 2024, ஏப்ரல் மாதத்தில் அடையாளம் தெரியாது இறந்தவரின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மூவா... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவத் தளபதி வருகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவ தளபதி திங்ராஜ் சேத் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஒற்றுமையின் மையமாக விளங்கி வரும் ஆரோவிலின் சிறப்புகள் மற்றும் தனித்துவங்கள் க... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். திண்டிவனம் பாரதிதாசன் பேட்டையைச் சோ்ந்தவா் அய்யப்பன் (42), மரம் வெட்டும் த... மேலும் பார்க்க