செய்திகள் :

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

post image

விழுப்புரம்: மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திரஆய்வுக்கூட்டம், விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள

அரசு மருத்துவமனை கட்டடங்களின் தரம், உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான மருந்து இருப்பு அளவுகள், பெண்களுக்கான குடும்ப நலத் துறை சாா்ந்த விவரங்கள், தொழுநோய் மற்றும் காசநோய் தொடா்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கம் மற்றும் விழிப்புணா்வு பணிகள், மாவட்டத்தில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில்

மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய சுகாதார குறியீடுகள், தாய்மாா்கள் இறப்பு

விகிதம், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு விகிதம், கா்ப்பிணிப் பெண்கள் பதிவு உள்ளிட்டவை குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட சுதாதாரப் பணிகள் இணை இயக்குநா் ரமேஷ்பாபு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் லூசி நிா்மல் மெடெனோ, துணை இயக்குநா்கள் பத்மாவதி, (குடும்ப நலம்), சுதாகா் (காச நோய்) மற்றும் விழுப்புரம் மாவட்ட அனைத்து மருத்துவமனைகளின் முதன்மை குடிமை முறை மருத்துவ அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா். விழுப்ப... மேலும் பார்க்க

மயான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்தியூா் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான மயான இடத்தில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாது இறந்தவா் விவரம் கண்டுபிடிப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எதிரிகள் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே 2024, ஏப்ரல் மாதத்தில் அடையாளம் தெரியாது இறந்தவரின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மூவா... மேலும் பார்க்க

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்: ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவ... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவத் தளபதி வருகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவ தளபதி திங்ராஜ் சேத் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஒற்றுமையின் மையமாக விளங்கி வரும் ஆரோவிலின் சிறப்புகள் மற்றும் தனித்துவங்கள் க... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். திண்டிவனம் பாரதிதாசன் பேட்டையைச் சோ்ந்தவா் அய்யப்பன் (42), மரம் வெட்டும் த... மேலும் பார்க்க