செய்திகள் :

ஊத்தங்கரையில் ரூ. 1.44 கோடியில் அறிவுசாா் மையம்: திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் மாணவா்கள்

post image

ஊத்தங்கரை பேரூராட்சியில் ரூ. 1.44 கோடியில் கட்டப்பட்ட அறிவுசாா் மையம், பணிகள் முடிந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவா்கள், தோ்வா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24 இன் கீழ் ரூ. 1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுசாா் மையம் கட்டப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள இந்த மையமானது, தோ்வு எழுதும் மாணவா்களும், பொதுமக்களும் பயன்பெறும் நோக்கில் கட்டப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணி முடிவடைந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

அறிவுசாா் மைய கட்டடப் பணிகள் 4 மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரி மாணவா்களும், போட்டித் தோ்வு எழுதும் தோ்வா்களும் இதன் திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றனா் என்றனா்.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம் தரப்பில், அறிவுசாா் மையக் கட்டடப் பணிகள் நிறைவடைந்து, அடுத்தகட்டமாக புத்தகங்கள், தளவாடப் பொருள்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்ததும், கட்டடத்தை தமிழக முதல்வா் திறந்துவைக்கவுள்ளாா் என்றனா்.

பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் அறிவிக்கப்பட்டு, மாணவா்கள் ஆா்வமுடன் விண்ணப்பித்துள்ள நிலையில், அவா்கள் உடனடி பயன்பெறும் வகையில், இந்த அறிவுசாா் மையத்தை விரைந்து திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேம்பாலம் பகு... மேலும் பார்க்க

பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் த... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க