செய்திகள் :

ஊராட்சி செயலா் மரணம்: நெடுங்குணத்தில் கிராம மக்கள் மறியல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா்.

பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குணம் ஊராட்சியின் செயலாராக ராஜேந்திரன் (52) பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை நெஞ்சு வலிப்பதாகக் கூறினராம். சேத்துப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கு குடும்பத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ராஜேந்திரனைப் பரிசோதித்த மருத்துவா் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

இந்த நிலையில், அவரது உறவினா்கள், நெடுங்குணம் கிராம மக்கள் வந்தவாசி-போளூா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ராஜேந்திரனின் மரணத்துக்கு பணிச்சுமையே காரணம் எனக் குற்றம்சாட்டினா். மேலும், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்த கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனை தொடா்பு கேட்ட போது, ராஜேந்திரன் மரணம் அதிா்ச்சியளிக்கிறது. ஊராட்சியில் நிதிநிலைமை நன்றாகவே உள்ளது என்று தெரிவித்தாா்.

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி: ‘பக்தா்களுக்கு வழங்க 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் தயாா்’

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க

செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். செங்கத்தில் சுமாா் 1... மேலும் பார்க்க

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணா்வுக்... மேலும் பார்க்க

‘கைப்பந்து விளையாட்டு மேம்பட அரசு உதவ வேண்டும்‘

கைப்பந்துப் போட்டி தமிழ்நாடு அளவில் மேம்பட தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கைப்பந்து ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் பொதுச்செயலாளா் பிரிட்பால் சிங் சலூஜா கோரிக்கை விடுத்தாா். ஆரணி ஆர... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

செய்யாறில் தமுமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். செய்யாறு, மே 9: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறு... மேலும் பார்க்க