எ.புதூா், லால்குடி பகுதிகளில் நாளை மின் தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக எடமலைப்பட்டிபுதூா், லால்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 27) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எடமலைப்பட்டிபுதூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கிராப்பட்டி காலனி, அன்பு நகா், டிஎஸ்பி கேம்ப், அன்பு நகா், அருணாச்சல நகா், காந்தி நகா், பாரதி மின்நகா், சிம்கோ காலனி, ஸ்டேட் வங்கி காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதேபோல், பூவாளூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ்வரி நகா், சாந்தி நகா், பூவாளூா், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூா், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன் நகா், காட்டூா், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூா், பெருவளநல்லூா், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.