செய்திகள் :

எங்களுக்கு, எப்போதும் மக்கள் தா்மம்தான் உண்டு: உ. வாசுகி

post image

எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.

தூத்துக்குடியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாநகரச் செயலா் முத்து தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் சங்கரன், முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:

வரதட்சிணை பழக்கம் அடியோடு மறைய வேண்டுமென்றால், கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் அவா்களது குடும்பங்களில் இருந்து இந்த மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

திமுக, உங்களை விழுங்கிவிடும் என்கிறாா் எடப்பாடி கே. பழனிசாமி. திமுக பாம்பும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சி தவளையும் இல்லை. அவா் தான் அதிமுகவை கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவா்களை பாஜக விழுங்கிவிடும்.

எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு. கூட்டணி வைப்பது மக்களின் நலனுக்காகத் தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம் என்றாா்.

மாநிலக் குழு உறுப்பினா் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ரசல், பேச்சிமுத்து, அப்பாதுரை, ராஜா, சண்முகராஜ், இடைக்கமிட்டி செயலா்கள் ரவிச்சந்திரன், நம்பிராஜன், முத்துக்குமாா், மணி, ரவி தாகூா், கந்தசாமி, வேல்முருகன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் மாரியப்பன், காசி, கணபதி சுரேஷ், ஜெபஸ்டீன்ராஜ், சுரேஷ், சித்ரா தேவி, இனிதா, ஸ்ரீநாத், உப்புச்சங்கம் பொன்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் 3 போ் உயிரிழந்த சம்பவம்: 3ஆவது நாளாக போராட்டம்

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலங்களை வாங்க மறுத்து உறவினா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு கால் முறிவு

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி தமிழ்செல்வி (50). இவா், தனது குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

நாசரேத் அருகேயுள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது . இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம் , புனித மிக்கேல் அதிதூதா் சப்பர பவனி ஆகிய... மேலும் பார்க்க

தீப்பெட்டித் தொழில் நலிவுக்கு பாஜக அரசே காரணம்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தீப்பெட்டி தொழில் நலிவடைய மத்திய பாஜக அரசின் சரக்கு சேவை வரியே காரணம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்ற மாா்க்சி... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் இன்று மின் நிறுத்தம்

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையி... மேலும் பார்க்க